தமிழகத்தில் வெயிலின் தாக்கத்தை பொறுத்து கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறக்கப்படும் தேதி குறித்து முடிவெடுக்கப்படும் என பள்ளக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் வைக்கப்பட்டிருந்த மே தின நினைவு படத்திற்கு அமைச்சர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், மாணவர்கள் சேர்க்கையின் போது நிர்ணயிக்கப்பட்டதை விட அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.