தமிழகத்தில் 1 முதல் 12-ஆம் வகுப்பு மாணாக்கர்களுக்கான காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு அட்டவணையை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, காலாண்டு மற்றும் முதல் பருவத் தேர்வு 2025 செப்டம்பர் 18 முதல் 26-ம் தேதி வரை நடைபெறும் என்றும், அரையாண்டு மற்றும் 2-ஆம் பருவத்தேர்வு 2025 டிசம்பர் 15 முதல் 23-ஆம் தேதி வரை நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.