மதுரை வாடிப்பட்டி அருகே லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் 12 கிலோ மீட்டர் தூரம் வரை இழுத்து செல்லப்பட்டு உடல் சிதறி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சூரிய பிரகாஷ் என்பவர் வடுகப்பட்டிக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்க, அவ்வழியாக வந்த ஹரியானா மாநில லாரி மோதியது. இதனை தொடர்ந்து லாரியின் முன்பகுதியில் இளைஞர் சிக்கியிருப்பதை அறியாத ஓட்டுநர் லாரியை ஓட்டி சென்றதில் உடல் சிதறி இளைஞர் பலியானார். இதனிடையே பின்புறமாக வந்த பிற லாரி ஓட்டுநர்கள் லாரியை மடக்கி தகவல்களை கூறியபோது லாரி ஓட்டுநர் அங்கிருந்து தப்பி ஓடினார்.