கோவையில் திடீரென்று வீசிய புழுதிக் காற்றால் மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்த இளைஞர்கள் நிலைக்குலைந்த வீடியோ காட்சிகள் வெளியானது. கணுவாய் - யமுனா நகர் பகுதியில் திடீரென புழுதிக் காற்று வீசியது. அப்போது அங்குள்ள மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்த இளைஞர்கள் காற்றை தாக்குப்பிடிக்க முடியாமல் பாதுகாப்பான இடங்களுக்கு தப்பி ஓடினர். மேலும் மைதானத்தில் இருந்த பொருட்களும் காற்றில் பறந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.