திருக்கோவிலூர் அருகே மகளிர் சுய உதவி குழுவில் பணம் பிரிப்பது தொடர்பாக இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. பெரியனூர் கிராமத்தில் ஜெயந்தி என்பவர் தலைமையில் மகளிர் சுய உதவிக்குழு செயல்பட்டு வருகிறது. கடந்த மாதம் குழு மூலமாக வங்கியில் இருந்து எடுக்கப்பட்ட 7 லட்ச ரூபாயை பிரித்து தராமல் தலைவி, துணைத் தலைவி பிரித்துக் கொண்டதாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், சனிக்கிழமை இரவு ஜெயந்தி வீட்டிற்கு வந்த குழுவில் உள்ள ஒரு தரப்பினர் வீட்டில் இருந்த பொருட்களை அடித்து சேதப்படுத்தினர்.