பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே இரண்டு குடும்பத்தினர் வெளியே வர முடியாத அளவிற்கு கம்பி வேலி அமைத்தது தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நன்னை கிராமத்தை சேர்ந்த நல்லபெருமாள், பெரியசாமி ஆகிய இருவரும் பல ஆண்டுகளாக நத்தம் புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டி குடியிருந்து வருவதாக கூறப்படுகிறது. அவர்களது வீட்டிற்கு அருகில் உள்ள நிலத்தை பரமசிவம் என்பவர் வாங்கியதாக தெரிகிறது. இந்த நிலையில், அவர்களது இரு கும்பத்தினரும் வெளியில் வரமுடியாதபடி பரமசிவம் கம்பி வேலி அமைத்துள்ளார்.இதுதொடர்பாக, அளிக்கப்பட்ட புகாரின் பேரில் அங்கு சென்ற வட்டாட்சியர் கம்பி வேலியை அகற்றி விசாரணை மேற்கொண்டுள்ளார்.