எம்.ஜி.ஆர். போன்று விஜய்க்கு ஆதரவு கிடைக்குமா என்பது மக்களின் கையில்தான் உள்ளதாக புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் 2026 தேர்தல் முற்றிலும் வித்தியாசமான தேர்தலாக அமையும் என்றும், பாஜகவுடன் கூட்டணி தொடரும் எனவும் கூறினார்.