ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே திகினாரை ஜோரைக்காடு கிராமத்திற்குள் புகுந்த காட்டு யானைகள், கரும்புகளை தின்றும், பயிர்களை மிதித்தும் சேதப்படுத்தின. இதனால் கவலை அடைந்துள்ள விவசாயிகள், யானைகள் வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், சேதத்திற்கு உரிய உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.