கன்னியாகுமரி மாவட்டம் கோலஞ்சி மடம் பகுதியில் காட்டு யானைகள் அட்டகாசம் அதிகரித்துள்ளதால் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. ரப்பர் தோட்ட தொழிலாளர்களை விரட்டிய காட்டு யானை, அங்கிருந்த வீடுகளை சேதப்படுத்திவிட்டு சென்றது. இதனால் ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் அச்சத்தில் உள்ளனர்.