குமரி மாவட்டத்தில் 8 ஆண்டுகளுக்கு முன்பு கணவரை அடித்துக் கொலை செய்து விட்டு, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடிய மனைவியையும், அவரது கள்ளக்காதலனையும் போலீசார் கைது செய்தனர். மடிச்சல் பகுதியை சேர்ந்த சிவக்குமார் என்பவரின் மனைவி ஷீஜாவுக்கும், அதே பகுதியை சேர்ந்த எழில் என்பவருக்கும் திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டது. கணவர் இடையூறாக இருந்ததால் கடந்த 2017 அக்டோபர் 14ஆம் தேதி எழிலுடன் சேர்ந்து சிவக்குமாரை அடித்தும், முகத்தில் தலையணையை வைத்து அழுத்தியும் கொலை செய்த ஷீஜா, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடியுள்ளார். .