கத்தரி வெயில் தொடங்கிய நிலையில், சென்னையில் மாலை நேரத்தில் கருமேகங்கள் சூழ்ந்து கொண்டு பரவலாக மிதமான மழை பெய்ததால் இதமான சூழல் நிலவியது. சென்னையில் சேப்பாக்கம், எழும்பூர், அண்ணாசாலை, மெரினா, பட்டினப்பாக்கம், திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.