திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பெய்த மழையால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர். மூஞ்சிக்கல், கல்லறை மேடு, கான்வென்ட் ரோடு, ஏரி சாலை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 1 மணி நேரம் மழை பெய்த நிலையில், அதனை பொருட்படுத்தாத சுற்றுலா பயணிகள் குடை பிடித்த படி பூங்காவை சுற்றி பார்த்து மகிழ்ந்தனர்.