சேலத்தில் மாநகராட்சி சார்பில் குடிநீர் குழாய் பதிக்க பள்ளம் தோண்டியபோது மண் சரிவு ஏற்பட்டதில், தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். சேலத்தில் பழைய குடிநீர் குழாய்களுக்கு பதிலாக புதிய குடிநீர் குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக, நெத்திமேடு பகுதியில் ஜேசிபி மூலம் தொழிலாளர்கள் பள்ளம் தோண்டியபோது மண் சரிவு ஏற்பட்டது. அதில், அருகில் இருந்த தனியார் இணையதள கம்பம் சரிந்து தொழிலாளர்கள் மீது விழுந்ததில், பெரியண்ணன் என்பவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.