மயிலாடுதுறையில் முன்பட்ட குறுவை நடவு பணியில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். களைப்பு தெரியாமல் இருக்க பெங்காலி பாடல்களை பாடிய படியே பணி செய்தனர். கூலி தொழிலாளிகள் 100 நாள் வேலைக்கு செல்வதால், ஆட்கள் பற்றாக்குறை காரணமாக மூன்று ஆண்டுகளாக வடமாநில தொழிலாளர்களையே பயன்படுத்துவதாக விவசாயிகள் தெரிவித்தனர். குறைவான சம்பளத்தில் வடமாநில தொழிலாளர்கள் விவசாய பணிகளில் ஈடுபடுவது தங்களுக்கு வரப்பிரசாதமாக உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.