தேனியில் வைகை ஆற்றில் நீர்வரத்து குறைந்து ஊரகப் பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டதால் பொதுப்பணித்துறை மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்தனர். முல்லைப் பெரியாறு மற்றும் வைகை ஆறுகளில் இருந்து 27 குடிநீர் திட்டங்களுக்கு விநாடிக்கு 100 கன அடி நீர் மற்றும் மதுரைக்கு 50 கன அடி லிட்டர் தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது விநாடிக்கு 100 கன அடி தண்ணீர் மட்டுமே திறக்கப்படுவதால் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் குன்னூர் ஆற்றில் ஆய்வு மேற்கொண்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள், குடிநீர் பற்றாக்குறையை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அதுவரை உரை கிணறுகளை சுற்றிலும் தண்ணீர் தேங்கும் வகையில், தற்காலிகமாக வாய்க்கால் அமைத்துக் கொள்ளும்படியும் அறிவுறுத்தினர்.