கிருஷ்ணகிரி கெலவரப்பள்ளி அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் ஆயிரத்து 449 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் கரையோர கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், தண்ணீர் நுரையுடன் வருவதால் ஆற்றில் ரசாயன கழிவுகள் கலப்பதை தடுக்க தமிழக - கர்நாடகா மாநில அரசுகள் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.