தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே குடிநீருக்காக பொதுமக்கள் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. பண்டஹள்ளி ஊராட்சிக்குட்பட்ட ஆலங்கட்டு கிராமத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராம மக்களுக்கு குடிநீர் தேவைக்காக கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு, ஆழ்துளை கிணறு தோண்டப்பட்டு, சின்டெக்ஸ் டேங்க் அமைக்கப்பட்டது. ஆனால் தற்போது ஆழ்துளை கிணற்றில் தண்ணீர் இல்லாததால் பொதுமக்கள் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்தே பண்டஹள்ளி கிராமத்தில் சென்று குடிநீர் எடுத்து வருவதாக கூறப்படுகிறது.