போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக்கை, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஜாபர் சேட் என குறிப்பிட்டு பேசியதால் தொண்டர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது. சிவகாசி அருகே திருத்தங்கலில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய ராஜேந்திர பாலாஜி, திமுக ஆட்சியில் தமிழகம் போதையில் மூழ்கியிருப்பதாகவும், திமுகவினரே தவறு செய்வதால் தான் தமிழகத்தில் போதை கலாச்சாரம் அதிகரித்துள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.