கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே தோட்டத்தில் கள்ளநோட்டு அடித்த வழக்கில், கர்நாடகாவில் தலைமறைவாக இருந்த விசிக நிர்வாகியை போலீஸார் கைது செய்தனர். அதர்நத்தம் கிராமத்தை சேர்ந்தவனும், விசிகவின் முன்னாள் கடலூர் மேற்கு மாவட்ட பொருளாளருமான செல்வம் என்பவன் தனது தோட்டத்தில் கள்ள நோட்டுகள் அச்சடித்து வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அங்கு சோதனை மேற்கொண்ட போலீஸார், கள்ளநோட்டு அச்சடிக்க பயன்படுத்திய இயந்திரம் மற்றும் 85 ஆயிரம் மதிப்பிலான 500 ரூபாய் கள்ளநோட்டுகளை பறிமுதல் செய்து 7 பேரை ஏற்கனவே கைது செய்தனர்.