மயிலாடுதுறை மாவட்டம், கிள்ளியூர் ஊராட்சிக்கு அரசுப் பேருந்து வசதி கோரி கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியரகத்தில் மனு அளித்தனர். கிராமத்தில் வாழும் மக்கள் எந்த ஒரு தேவை என்றாலும் திருக்கடையூர் அல்லது செம்பகனார்கோவில் கிராமத்திற்கு பல கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை நீடிப்பதாக வேதனை தெரிவித்தனர்.