பக்ரீத் பண்டிகை மற்றும் வார விடுமுறையை முடிந்து சென்னை நோக்கி படையெடுக்கும் வாகனங்களால் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஆயிரக்கணக்கான வாகனங்கள் சுங்கச்சாவடிக்கு வந்ததால், திருச்சி, சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மூன்று கிலோமீட்டருக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக எதிர்திசையில் உள்ள இரண்டு வழித்தடங்களிலும் சென்னை செல்லும் வாகனங்கள் பயணிக்க அனுமதிக்கப்பட்டன.