சிவகங்கை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் அமைந்துள்ள பணித்துணை விநாயகர் கோயிலில், வருடாபிஷேகம் மற்றும் 108 சங்காபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. கோயிலில், சிறப்பு கணபதி ஹோமம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து, 108 சங்குகளில் புனித நீரை ஊற்றி சிவாச்சாரியார்கள் அபிஷேகம் செய்தனர். இதில், ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.