மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் முடிவடைய இருக்கும் சூழலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மீண்டும் ரஜ்யசபா சீட் கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுக ஆதரவுடன் 2019ல் ரஜ்யசபா எம்.பி ஆன வைகோவின் பதவிக்காலம் வரும் ஜூலையில் நிறைவடைகிறது. 2024 நாடாளுமன்ற தேர்தல் ஒப்பந்தத்தில் மதிமுக-விற்கு மீண்டும் ராஜ்யசபா சீட் கொடுப்பது குறித்து திமுக உத்தரவாதம் எதுவும் அள்ளிக்காத சூழலில், சமீபத்தில் மதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய வைகோ மீண்டும் ராஜ்யசபா சீட் கொடுக்காவிட்டால் கோபப்படக் கூடாது என கூறியிருந்தார். இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசிய வைகோ, ராஜ்யசபா சீட் குறித்தும் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது