ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோவிலில் வீதியுலா சென்ற பஞ்ச மூர்த்திகளை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். வைகாசி விசாக திருவிழாவின் 7-ஆம் நாளான நேற்று மூஷிகம், மயில், நந்தி, பல்லக்கு, கேடக வாகனங்களில் பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளி வீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.