சென்னையை அடுத்த புழல் பகுதியில், கூலித் தொழிலாளியை கத்தியால் வெட்டிய இருவர் கைது செய்யப்பட்டனர். லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்த சுபாஷ் சந்திர போஸ் என்பவர், அதே பகுதியைச் சேர்ந்த தினேஷ் என்பவரிடம் கடன் பெற்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தினேஷ் மற்றும் அவரது நண்பர் சரவணன் ஆகியோர் சுபாஷ் சந்திர போசை மது அருந்த அழைத்துள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறில், சுபாஷ் சந்திர போசின் தலை, மணிக்கட்டு, தோள்பட்டையில் சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. காயமடைந்த சுபாஷ், ஸ்டான்லி மருத்துவமானியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.