புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு மோதல் சம்பவத்தில் மேலும் 2 பேரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். வடகாடு முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டத் திருவிழாவின்போது இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டு கலவரமாக மாறியது. இதில் இருதரப்பை சேர்ந்த 20 பேர் காயமடைந்தனர். மேலும் தாக்குதலில் ஈடுபட்ட மாற்று சமூகத்தை சேர்ந்த 20 நபர்களையும் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த ஆறு நபர்களையும் போலீசார் ஏற்கனவே கைது செய்திருந்தனர். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த சேதுபதி என்பவரையும், மாற்று சமூகத்தை சேர்ந்த வீரபாண்டி என்பவரையும் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.