தேனி காவல் நிலைய பூட்டை உடைத்து முக்கிய ஆவணங்கள் கஞ்சா மற்றும் கேமராவை கொள்ளையடித்து சென்ற இருவரில் ஒருவரை கைது செய்த போலீசார் மற்றொருவரை தேடி வருகின்றனர். ண்ணஞ்ஜி விலக்கு பகுதியில் மாவட்ட போதை பொருள் நுண்ணறிவு தடுப்பு பிரிவு காவல் நிலையம் செயல்பட்டு வரும் நிலையில் நள்ளிரவு காவல் நிலையத்திற்குள் நுழைந்த மர்மநபர்கள் பூட்டை உடைத்து கஞ்சா, கேமரா, மற்றும் முக்கிய வழக்கு தொடர்பான ஆவணங்கள் ஆகியவற்றை திருடி சென்றனர். காவல் நிலையத்தின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் மாவட்ட காவலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.