திருவள்ளூர் அருகே தங்க முலாம் பூசப்பட்டு போலி நகைகளை விற்பனை செய்ய முயன்ற கும்பலை போலீசார் ஸ்கெட்ச் போட்டு கைது செய்தனர். மணவாள நகர் பகுதியில் உள்ள பியூட்டிபார்லருக்கு வந்த பெண் ஒருவர் 10 லட்சம் பணம் கொடுத்தால் அரை கிலோ தங்கம் தருவதாக உரிமையாளரிடம் தெரிவித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த உரிமையாளர் புகார் அளித்ததை அடுத்து போலீசார், மோசடி கும்பலை கையும் களவுமாக பிடிக்க ஸ்கெட்ச் போட்டு, பத்து லட்சம் பணம் தருவதாக கூறி வரவழைத்து அவர்களிடம் இருந்த தங்க முலாம் பூசப்பட்ட அரை கிலோ பித்தளையை கைப்பற்றினர். அவர்கள் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த லட்சுமி மற்றும் அவரது தம்பி ரவி என்பதும், அவர்களுக்கு மூளையாக செயல்பட்டது மதுரையை சேர்ந்த மணி என்பதும் தெரியவந்தது.