போக்குவரத்து துறை பயிற்சி ஊழியர்கள் சார்பில், கோவை மாவட்டம் பொள்ளாச்சி காந்தி சிலை அருகே, சாலை விதிமுறைகளை மதிக்காமல் விபத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்த விழிப்புணர்வு ஒத்திகை நடைபெற்றது. ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்த மூவர் அரசு பேருந்து மோதி விபத்தில் சிக்குவது, அவர்களை மீட்டு ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அழைத்து செல்வது போன்றவை தத்ரூபமாக நிகழ்த்தி காட்டப்பட்டதை பொதுமக்கள் வியப்புடன் பார்த்துச் சென்றனர்.