நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே அரசு வழங்கிய பட்டா நிலத்தை காலி செய்ய போவதில்லை என்று நிலத்தை பெற்ற திருநங்கைகள் தெரிவித்தனர். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக 36 பேருக்கு நில பட்டா வழங்கபட்டது. அவர்களுக்கு வீடு கட்டித் தராத நிலையில், தாங்களாகவே குடிசை அமைத்து வசித்து வருகின்றனர். மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதியுமின்றி தவித்து வரும் நிலையில், அந்த பகுதியில் வீடு கட்ட அனுமதியில்லை என்பதால் இடத்தை காலி செய்து, அரசு தரும் மாற்றும் இடத்திற்கு செல்ல வேண்டும் என்று வருவாய்த்துறையினர் கூறுவதாக தெரிவித்தனர்.