வார விடுமுறை மற்றும் தமிழ் புத்தாண்டு என தொடர் விடுறையை முன்னிட்டு, கொடைக்கானலில் சுற்றுலாப்பயணிகள் குவிந்தனர். தூண் பாறை, குணா குகை, பைன் மரசோலை, மோயர் சதுக்கம் உள்ளிட்ட இடங்களை குடும்பத்துடன் சுற்றிப்பார்த்த அவர்கள், செல்ஃபி எடுத்து இயற்கை அழகை கண்டு ரசித்தனர். மேலும், நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.