வார விடுமுறைக்கு கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள் அதிகாலை சூரியன் உதியத்தை கண்டு ரசித்தனர். ஞாயிற்றுக் கிழமை விடுமுறையையொட்டி கன்னியாகுமரியில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அதிகாலை சூரிய உதயத்தை காண சன்ரைஸ் பாயிண்ட், திரிவேணி சங்கமம், பகவதி அம்மன் கோவில் கிழக்கு வாசல் பகுதிக்கு வருகை தந்திருந்த சுற்றுலா பயணிகள் சூரியன் உதயத்தை கண்டு ரசித்ததோடு, செல்பி எடுத்தும் புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்தனர். பின்னர் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் கடலில் குளித்தும், அலையில் விளையாடியும் சுற்றுலா பயணிகள் மகிழ்ந்தனர்.