வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே வனவிலங்குகளுக்கு வைக்கப்படும் நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் மின்வாரிய ஊழியரின் டூவீலர் டயர் வெடித்தது. குடியாத்தம் பகுதி மின்வாரிய ஊழியர் பாஸ்கர், மின்கம்பங்களை சீரமைக்க சேர்த்துவண்டை ஜெஜெ நகர் பகுதிக்கு சென்றபோது, சாலையில் கிடந்த நாட்டு வெடிகுண்டு வெடித்தது.