விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் வத்திராயிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் இடி,மின்னலுடன் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. கோடை வெயில் தாக்கத்தால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகி வந்த நிலையில், திடீரென பெய்த கனமழையின் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.