திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அருகே அண்ணன் காதல் விவகாரத்தில் தம்பியை கடத்திய தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். களம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த தனுஷ், தேனியை சேர்ந்த விஜயஸ்ரீயை இன்ஸ்டாகிராமில் காதலித்து திருமணம் செய்த நிலையில் அடியாட்களுடன் சென்ற பெண் வீட்டார், பள்ளியில் படிக்கும் தனுஷின் தம்பியை கடத்தி சென்றனர்.