திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயிலில் நடந்த சித்திரை பிரமோற்சவ விழாவில் வெள்ளி மயில் வாகனத்தில் முருகன் வீதி உலா நடைபெற்றது. இதனை தொடர்ந்து ராஜா வீட்டு சீதனத்தை அர்ச்சகர்கள் கொண்டு வந்து முருகப்பெருமானுக்கு அங்க வஸ்திரம் அணிவித்து தீபாராதனை செய்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.