திருச்சியில் கூனி பஜார் பகுதியில் பூட்டை உடைத்து நகை, பணத்தை கொள்ளையடித்து வீட்டிற்குள் இருந்த நான்கு திருடர்களில் மூன்று பேர் போலீசாரிடம் இருந்து தப்பினர். கூனிபஜாரை சேர்ந்த சக்திவேல் மற்றும் குடும்பத்தினர் பழனிக்குச் சென்று வீடு திரும்பிய போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, உள்ளே நான்கு திருடர்கள் இருந்ததைக் கண்டு வீட்டை வெளிப்பக்கமாக தாழிட்டனர். தகவலின் பேரில் மூன்று போலீசார் வந்து சுற்றி வளைத்த நிலையில் மூன்று திருடர்கள் வீட்டின் மொட்டை மாடி வழியாகத் தப்பிச் சென்றனர். கஞ்சா போதையில் இருந்த ஒருவனை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். 25 பவுன் நகை, கால் கிலோ வெள்ளி மற்றும் 20 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளை போனதாக உரிமையாளர் புகார் அளித்துள்ளார்.