திருச்சி திண்டுக்கரை அருகே பட்டப் பகலில் அரசுப் பேருந்தில் சென்ற இளைஞரை கீழே தள்ளி சராமாரியாக வெட்டி கொன்றுவிட்டு தப்பியோடிய 3 சிறுவர்கள் உட்பட 5 பேர் கொண்ட கும்பலை தனிப்படை போலீசார் மணப்பாறையில் வைத்து கைது செய்தனர். ஜியபுரத்தை அடுத்த கொடியாலம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் விஷ்ணு. கொலை வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த இவர் சம்பவத்தன்று கொடியாலத்தில் இருந்து சத்திரம் பேருந்து நிலையத்திற்கு அரசு பேருந்தில் சென்றபோது பேருந்தில் இருந்து கீழே தள்ளிவிடப்பட்டு சராமரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார்.