திருவாரூரில் பிரதமர் வீடு கட்டும் திட்ட தவணை தொகையை கூடுதலாக பெற்றதாக கூறி, திருப்பி கேட்ட ஸ்டேட் பேங்க் இ சேவை மைய ஊழியரிடம் பெண் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அகரத்திருநல்லூரை சேர்ந்த தமயந்தி என்பவர் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு ஸ்டேட் பேங்க் இ சேவை மையத்திற்கு சென்று பிரதமர் வீடு கட்டும் திட்ட தவணை தொகையான 17 ஆயிரத்து 500 ரூபாய் பெற்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தமயந்திக்கு கூடுதலாக 10ஆயிரம் ரூபாய் தந்ததாக கூறி பேங்க் இ சேவை மைய ஊழியர் திருப்பி கேட்டதாக தெரிகிறது.