கோவை மாவட்டம் நரசிபுரம் பகுதியில் முகாமிட்டிருந்த காட்டுயானைகளை பட்டாசு வெடித்து வனத்துறையினர் வனப்பகுதிக்குள் விரட்டினர்.கடந்த சில மாதங்களாக பேரூர், மருதமலை, மதுக்கரை, தடாகம், வடவள்ளி, தொண்டாமுத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப்புற பகுதிகளில் குட்டிகளுடன் காட்டு யானை கூட்டம் முகாமிட்டு விவசாய நிலங்களை சேதப்படுத்தி வந்தது.இந்நிலையில் நரசிபுரம் பகுதியில் காட்டு யானைகள் முகாமிட்டது குறித்து விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.தொடர்ந்து காட்டுயானைகளை கண்காணித்து வந்த வனத்துறையினர் அதனை வனப்பகுதிக்குள் விரட்டினர்.