சேலம் மாவட்டம் காளிகவுண்டன்பாளையத்தில் ஆட்டு வியாபாரியின் மனைவி மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. காளிக்கவுண்டன் பாளையத்தை சேர்ந்த ஆட்டு வியாபாரி மாதையன் வியாபாரத்திற்காக வெளியூர் சென்றதாக கூறப்படும் நிலையில், வீட்டில் தனியாக இருந்த அவரது மனைவி சின்ன பொண்ணு உடம்பில் காயங்களோடு மயங்கி கிடந்ததாக தெரிகிறது. இதனை கண்ட அக்கம்பக்கத்தினர், அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தபோது அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் பக்கத்து வீட்டுக்காரர்களை விசாரணைக்கு அழைத்து சென்றனர்.