மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த தொடர் கனமழை காரணமாக முல்லை பெரியாறு அணைக்கு நீர்வரத்து நீர்வரத்து அதிகரித்து, நீர்மட்டம் ஒரே நாளில் இரண்டு அடி உயர்ந்து 135 அடியை எட்டியது. அணைக்கு விநாடிக்கு 5,505 கன அடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், 1,867 கன அடி நீர் திறக்கப்படுவதால் முல்லைப் பெரியாற்றில் தண்ணீர் ஆக்ரோஷமாக பாய்கிறது. அணைக்கு நீர்வரத்து அதிகரித்தால், நீர்திறப்பின் அளவும் அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதையும் படியுங்கள் : சோலையார் அணை முழு கொள்ளளவை எட்டியது..