Also Watch
Read this
By: Web Team
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்யும் தொடர் கனமழை காரணமாக மணிமுத்தாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணையிலிருந்து விநாடிக்கு 4 ஆயிரம் கன அடி நீர் தாமிரபரணி ஆற்றில் வெளியேற்றப்படுகிறது. 108 அடி உயரம் உள்ள மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் தற்போது 106 அடியை எட்டியதையடுத்து நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பாபநாசம், காரையார், சேர்வலாறு அணைகளில் இருந்து மொத்தம் 12 ஆயிரம் கன அடியும், மணிமுத்தாறு அணையில் இருந்து 4 ஆயிரம் கன அடியும் தண்ணீர் திறக்கப்பட்டு தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved