திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் மேல் மாடி பால்கனி இடிந்து விழுந்து, கீழ் மாடியில் உள்ள வீட்டில் சமையலறை முழுவதும் சேதமடைந்துள்ளது. 35 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட குடியிருப்பு கட்டிடங்களின் மேற்கூரைகள் பழுதாகி இடிந்து விழும் நிலையில், துறை சார்ந்த அதிகாரிகள் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என புகார் எழுந்துள்ளது.