சென்னை அடுத்த அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியில் மதுபோதையில் கண்ணில் பட்டவர்களை எல்லாம் சரமாரியாக கத்தியால் வெட்டிய ரவுடி கும்பலை, போலீசார் கைது செய்தனர். மங்களபுரத்தை சேர்ந்த நித்திவேல் கொலை வழக்கில் கைதாகி, தற்போது நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்து தினமும் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வருகிறார். இந்நிலையில் தனது கூட்டாளிகளான லோகேஷ், மணிகண்டன் ஆகியோருடன் சேர்ந்து மதுபோதையில் கண்ணில் பட்டவர்களை எல்லாம் கத்தியால் வெட்டியதில், 5 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் மூவரையும் கைது செய்தனர். நிபந்தனை ஜாமீனில் இருக்கும் நித்திவேல், தன்னை விடாமல் கண்காணிக்கும் போலீசாரை பழிவாங்குவதற்காக பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியதாக கூறியுள்ளான்.