கிணற்றில் தவறி விழுந்த புள்ளி மானை தீயணைப்பு வீரர்கள், உயிருடன் மீட்டு, வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் அருகில் உள்ள கொடியங்குளம் என்.புதூர் கிராமத்தில் உள்ள 60 அடி கிணற்றில் ஒரு புள்ளிமான் தவறி விழுந்து விட்டதாக ஒட்டப்பிடாரம் தீயணைப்பு நிலைய அலுவலர் சங்கரனுக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கிணற்றில் தத்தளித்த புள்ளிமானை வலை வைத்து உயிருடன் மீட்டனர். பின்னர் அந்த மானை வன அலுவலர் ஆனந்த் தலைமையிலான குழுவினரிடம் ஒப்படைத்தனர்.