செங்கல்பட்டு மாவட்டம் நெம்மேலி அருகே, கடலில் இருந்த சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் நீளமுள்ள ராட்சத குழாய்கள் கடல் சீற்றம் காரணமாக கரை ஒதுங்கியது. கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்காக, இந்த ராட்சத குழாய் கடலில் நிறுவப்பட்டிருந்தது. கரை ஒதுங்கிய குழாயை மீண்டும் கடலில் நிலை நிறுத்துவதற்கான பணி 2-வது நாளாக தொடர்ந்து நடைபெற்றது.