திருவாரூர் மாவட்டத்தில் ரயில் படிக்கட்டில் பயணித்த நபரின் கால்கள் நடைமேடையில் சிக்கி முறிந்தன. சுரேஷ் என்பவர் காரைக்குடியில் இருந்து திருவாரூர் செல்லும் ரயிலின் படிக்கட்டில் கால்களை தொங்க விட்டபடி பயணம் செய்ததார். அப்போது தம்பிகோட்டை ரயில் நிலையத்தில், நடைமேடையை கவனிக்காத நிலையில், அவரது இரண்டு கால்களும் நடைமேடையில் சிக்கி முறிந்தன.