நாகையில் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதால் ஆத்திரமடைந்த இரும்பு கடை வியாபாரி அடியாட்களுடள் புகுந்து பாத்திரக்கடை உரிமையாளருக்கு மிரட்டல் விடுத்த வீடியோ வெளியாகி உள்ளது. அண்ணா சிலை அருகே பாத்திரக்கடை நடத்தி வரும் சரவண முருகன், வாஞ்சூரை சேர்ந்த லோகேசுக்கு ரூ.1 லட்சம் கொடுத்துள்ளார். பணம் வாங்கிய உடனே லோகேஷ் தலைமறைவானதால் அவரது சித்தப்பாவான இரும்பு வியாபாரி முருகன் ஒரு லட்சத்தை தந்துவிடுவதாக ஒப்புக் கொண்டார். இந்நிலையில் அடியாட்களுடன் பாத்திரக்கடைக்கு வந்த முருகன் சரவண முருகனுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.