திருப்பூர் மாவட்டம் சேமலைகவுண்டம்பாளையம் பகுதியில் 3 பேர் கொலை வழக்கில் குற்றவாளிகளை விரைவில் பிடிப்போம் என பல்லடம் டி.எஸ்.பி. சுரேஷ் தெரிவித்தார். அழகுமலையில் நடைபெற்ற விழிப்புணர்வு கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், சாஃப்ட்வேர் இன்ஜினீயர் செந்தில்குமார், அவரது தாய் மற்றும் தந்தை கொலை வழக்கு தொடர்பாக, போலீஸாருக்கு பொதுமக்கள் ஒத்துழைப்புத் தரும்படி கேட்டுக் கொண்டார்.